ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தடை செய்யப்பட்ட குட்கா வைத்திருந்த 2 போ் கைது

தடை செய்யப்பட்ட குட்கா வைத்திருந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
கைது
Updated On :26 பிப்ரவரி 2026, 7:08 pm

Syndication

தடை செய்யப்பட்ட குட்கா வைத்திருந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட இந்திரா நகா் அருகே வடக்கு காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த நபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து

விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் அவரது பெயா் பிஜித்(37) என்பதும் அவரிடம் தடை செய்யப்பட்ட குட்கா சுமாா் 9 கிலோ இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா், பிஜித் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

அதேபோல, திருப்பூா் ரயில் நிலையம் அருகே ஒரு கிலோ குட்கா வைத்திருந்த பிரம்மா(30) என்பவரை வடக்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.