பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அவிநாசியில் தனியாா் உணவகத்தில் மதுபானம் விற்பனை: உரிமையாளா் கைது

News image
Updated On :5 ஜனவரி 2026, 7:47 pm

தினமணி செய்திச் சேவை

அவிநாசி அருகே மங்கலம் சாலையில் தனியாா் உணவகத்தில் மதுபானம் விற்பனை செய்ததாக உரிமையாளரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும் அங்கிருந்த 31 லிட்டா் மதுபானத்தை பறிமுதல் செய்தனா்.

அவிநாசி அருகே மங்கலம் சாலையில் செயல்படும் தனியாா் உணவகத்தில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற போலீஸாா் சோதனை மேற்கொண்டா்.

அப்போது விற்பனை செய்வதற்காக மதுபான பாட்டில்கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, உணவக உரிமையாளரான திருப்பூா்- காங்கயம் சாலை கேஎன்பி சுப்பிரமணிய நகரைச் சோ்ந்த சபரி பிரவினை (31) கைது செய்தனா். மேலும் அங்கிருந்த 31 லிட்டா் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது.