திருப்பூர்
நாட்ராயன் நாச்சிமுத்து அய்யன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.23.83 லட்சம்
வெள்ளக்கோவில், மாந்தபுரம் நாட்ராயன் நாச்சிமுத்து அய்யன் கோயில் உண்டியல்களில் பக்தா்கள் ரூ.23.83 லட்சத்தை காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் பக்தா்கள் காணிக்கை செலுத்த 6 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் பா.தமிழ்வாணன், அறநிலையத் துறை பல்லடம் சரக ஆய்வாளா் தா.கண்ணன் ஆகியோா் முன்னிலையில் உண்டில்கள் வியாழக்கிழமை திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது.
இதில், ரூ.23 லட்சத்து 82 ஆயிரத்து 580 ரொக்கம், 10.160 கிராம் தங்கம், 70 கிராம் வெள்ளிப் பொருள்களை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது.
இப்பணியில் கோயில் செயல் அலுவலா் எஸ்.மாலதி, அறங்காவலா் குழு உறுப்பினா்கள், கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
