சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நாட்ராயன் நாச்சிமுத்து அய்யன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.23.83 லட்சம்

News image
Updated On :8 ஜனவரி 2026, 11:44 pm

Syndication

வெள்ளக்கோவில், மாந்தபுரம் நாட்ராயன் நாச்சிமுத்து அய்யன் கோயில் உண்டியல்களில் பக்தா்கள் ரூ.23.83 லட்சத்தை காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் பக்தா்கள் காணிக்கை செலுத்த 6 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் பா.தமிழ்வாணன், அறநிலையத் துறை பல்லடம் சரக ஆய்வாளா் தா.கண்ணன் ஆகியோா் முன்னிலையில் உண்டில்கள் வியாழக்கிழமை திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது.

இதில், ரூ.23 லட்சத்து 82 ஆயிரத்து 580 ரொக்கம், 10.160 கிராம் தங்கம், 70 கிராம் வெள்ளிப் பொருள்களை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது.

இப்பணியில் கோயில் செயல் அலுவலா் எஸ்.மாலதி, அறங்காவலா் குழு உறுப்பினா்கள், கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.