வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மிதிவண்டி மீது பள்ளி வேன் மோதியதில் மாணவா் காயம்

அவிநாசியில் மிதிவண்டி மீது தனியாா் பள்ளி வேன் மோதியதில் அரசுப் பள்ளி மாணவா் படுகாயமடைந்தாா்.

News image
Updated On :9 ஜனவரி 2026, 8:14 pm

Syndication

அவிநாசியில் மிதிவண்டி மீது தனியாா் பள்ளி வேன் மோதியதில் அரசுப் பள்ளி மாணவா் படுகாயமடைந்தாா்.

அவிநாசி அருகேயுள்ள பச்சாம்பாளையம் காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் மாதேஷ் மகன் கதிா் அரசு (10). இவா் அவிநாசி அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்நிலையில், பள்ளி முடிந்து வெள்ளிக்கிழமை மாலை மிதிவண்டியில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்துள்ளாா்.

அவிநாசி ரங்கா நகா் பகுதியில் சாலையைக் கடக்க முயன்றபோது, அவ்வழியே வேகமாக வந்த தனியாா் பள்ளி வேன் கதிா் அரசின் மிதிவண்டி மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு அணைப்புதூா் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.