டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மாற்றுத் திறனாளிகள் இ-சேவை மையங்கள் மூலமாக பேருந்துப் பயண சலுகைக்கு விண்ணப்பிக்கலாம்

மாற்றுத் திறனாளிகள் தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள இ-சேவை மையங்கள் மூலமாக பேருந்துப் பயண சலுகைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 ஜனவரி 2026, 6:33 pm

Syndication

மாற்றுத் திறனாளிகள் தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள இ-சேவை மையங்கள் மூலமாக பேருந்துப் பயண சலுகைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அனைத்து மாற்றுத் திறனாளிகளும் பயன்பெறும் பொருட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு 2025-2026-ஆம் ஆண்டு முதல் ஆன்லைன் இலவச பேருந்துப் பயணஅட்டைக்கு இ-சேவை மையங்கள் வழியாக பதிவு செய்து வழங்கப்படும் என மாநில மாற்றுத் திறனாளிகள் ஆணையரகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து மாற்றுத் திறனாளிகளும் தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள இ-சேவை மையங்கள் மூலமாக மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பேருந்துப் பயண சலுகைக்கு விண்ணப்பித்து பயன் அடையலாம் எனத் தெரிவித்துள்ளாா்.