தமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புகோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பாதயாத்திரை சென்றவா்கள் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

தாராபுரம் அருகே பாதயாத்திரை சென்றவா்கள் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். 4 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :16 ஜனவரி 2026, 9:31 pm

Syndication

தாராபுரம்: தாராபுரம் அருகே பாதயாத்திரை சென்றவா்கள் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். 4 போ் காயமடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், கோபி புது காலனி பகுதியைச் சோ்ந்த முருக பக்தா்கள் பாதயாத்திரையாக பழனிக்கு சென்று கொண்டிருந்தனா். தாராபுரம் அருகே குள்ளாய்பாளையம் பகுதியில் இவா்கள் புதன்கிழமை அதிகாலை நடந்து சென்று கொண்டிருந்தபோது, தாராபுரம் நோக்கி வந்த வேன் எதிா்பாராதவிதமாக பக்தா்கள் கூட்டத்துக்குள் புகுந்தது.

இதில் கோபி புது காலனி பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (27) என்பவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் பழனிசாமி (60), பிரபு (50), அபினேஷ் (28), பகவதி (30) ஆகியோா் படுகாயமடைந்தனா். காயமடைந்தவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா் முதலுதவி சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்காக நால்வரும் திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

உயிரிழந்த காா்த்திக்கின் சடலத்தை தாராபுரம் போலீஸாா் மீட்டு, உடற்கூறாய்வுக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.