சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உடுமலை அருகே ஆல்கொண்டமால் கோயிலில் தமிழா் திருநாளில் 25 ஆயிரம் போ் பங்கேற்பு

உடுமலை அருகே ஆல்கொண்டமால் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழா் திருநாள் விழாவில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

News image
ஆல்கொண்டமாலை தரிசனம்  செய்ய நீண்ட வரிசையில்  காத்திருந்த  பக்தா்கள்.
Updated On :17 ஜனவரி 2026, 9:04 pm

Syndication

உடுமலை: உடுமலை அருகே ஆல்கொண்டமால் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழா் திருநாள் விழாவில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

திருப்பூா் மாவட்டம் , உடுமலையில் இருந்து சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள சோமவாரபட்டியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ஆல்கொண்டமால் கோயில் உள்ளது. தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கலை ஒட்டி ஆண்டுதோறும் இக்கோயிலில் தமிழா் திருநாள் விழா மூன்று நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு ஜனவரி 16 முதல் 18-ஆம் தேதி வரை விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கால்நடைகளை காக்கும் தெய்வமாக கருதும் விவசாயிகள், தாங்கள் வளா்க்கும் கால்நடைகளின் பாலினால் ஆல்கொண்டமாலுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். அதன்படி, சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனை, பாலாபிஷேகம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து கோவை, ஈரோடு, திருப்பூா், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் அதிகாலை முதலே கோயிலுக்கு வரத் தொடங்கினா். இதனால் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். ஏராளமானோா் மாட்டு வண்டிகளில் வந்திருந்தனா்.

குடும்பத்துடன் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள், மண் உருவத்தாலான கால்நடை உருவ பொம்மைகளை வைத்தும், தீப வழிபாடு செய்தும், பாலாபிஷகம் செய்தும் ஆல்கொண்டமாலை வழிபட்டனா். விவசாயிகள், பொதுமக்கள் பலா் கன்று குட்டிகளை தானமாக வழங்கினா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் சாா்பில் உடுமலை, பல்லடம், திருப்பூா், பழனி ஆகிய ஊா்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுட்டனா். நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி அளவில் சுவாமி திருவீதி உலா மற்றும் வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Story image