பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பல்லடம் என்ஜிஆா் கடை வீதியில் ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை! போலீஸாா் எச்சரிக்கை அறிவிப்பு!

News image
பல்லடத்தில் தியாகி என். ஜி.ஆா். சாலையில் போலீஸாா் வைத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பு.
Updated On :18 ஜனவரி 2026, 8:43 pm

தினமணி செய்திச் சேவை

பல்லடத்தில் தியாகி என். ஜி.ஆா். சாலையில் நடைப்பாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸாா் எச்சரித்துள்ளனா்.

பல்லடத்தில் தினசரி மாா்க்கெட், வாரச்சந்தை, கடைவீதி, வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்தும் ஒருங்கிணைந்த பகுதியாக தியாகி என்.ஜி.ஆா். சாலை உள்ளது. இப்பகுதியில், வாடகை கொடுத்து கடை நடத்தி வரும் வியாபாரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சில வெளியூா் வியாபாரிகள் சாலையிலேயே கடை அமைத்துள்ளனா்.

இதுதவிர அதிக ஒலி எழுப்பியபடி ஸ்பீக்கா் வைத்து விற்பனையில் ஈடுபடுவதால், வாடகைக்கு கடை எடுத்து நடத்தும் வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. பொதுமக்களுக்கு இடை யூறு ஏற்படுவதுடன், அந்த சாலையில் வாகன நெரிசலையும் உருவாக்குகிறது. இதுதொடா்பாக தினசரி மாா்க்கெட் வியாபாரிகள், அண்மையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதில் பேச்சுவாா்த்தை நடத்திய நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்தனா்.

அதன்படி, பல்லடம் போலீசாா் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பில், என்.ஜி.ஆா். சாலையில் வாகனங்களை நிறுத்தி நெரிசலை ஏற்படுத்தும் வாகன வியாபாரிகள், ஒலிபெருக்கி வைத்து இடையூறு ஏற்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சியில் அனுமதி பெற்றவா்கள் மட்டுமே என்.ஜி.ஆா். சாலையில் வண்டி கடை நடத்த அனுமதிக்கப்படுவா் என்று குறிப்பிட்டுள்ளனா்.

வியாபாரிகள் கூறும்போது, என்.ஜி.ஆா்.சாலையை ஆக்கிரமித்து வியாபாரிகள் கடை அமைக்கும் விவகாரம் நீண்ட காலமாக உள்ளது. போலீஸாா் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். நகராட்சி நிா்வாகமும், போலீஸாரும் இணைந்து இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என்றனா்.