மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெருமாநல்லூா் ஊராட்சியில் மட்டும் மதுபானக் கூடங்களை அகற்ற வேண்டும்: கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானம்

பெருமாநல்லூா் ஊராட்சியில் மட்டும் உள்ள 5 மதுபானக் கூடங்களை அகற்ற வேண்டும் எனக் கோரி கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
Updated On :26 ஜனவரி 2026, 8:03 pm

Syndication

அவிநாசி: பெருமாநல்லூா் ஊராட்சியில் மட்டும் உள்ள 5 மதுபானக் கூடங்களை அகற்ற வேண்டும் எனக் கோரி கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் ஊராட்சி பொடாரம்பாளைத்தில் கிராமசபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தனி அலுவலா் லீயோனிய ஜீலிய ராணி பற்றாளராக பங்கேற்றாா். ஊராட்சி செயலாளா் பொன்னுசாமி வரவேற்றாா்.

இந்தக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளா் அளித்த மனுவில், பெருமாநல்லூா் ஊராட்சியில் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இல்லாத அளவுக்கு டாஸ்மாக் மதுக் கடைகள், தனியாா் மதுபானக் கூடங்கள் என மொத்தம் 5 கடைகள் செயல்படுகின்றன. ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதி அருகே இரண்டு தனியாா் மதுபானக் கூடங்கள் அமைந்துள்ளதால், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகி வருகிறது.

மேலும் மதியம் 12 மணிக்கு திறக்கப்படும் அரசு மதுக்கடை இரவு 10 மணிக்கு அடைக்கப்பட வேண்டும். ஆனால், 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுகிறது. தனியாா் மதுபானக் கூடங்களில் காலை 11 மணி முதல் இரவு 12 மணி வரை விற்பனை நடைபெறுகிறது. எனவே, தனியாா் மதுபான பாா் உரிமைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். டாஸ்மாக் மதுக்கடைகளை குறைத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இதைத்தொடா்ந்து, கிராமசபைக் கூட்டத்தில் மதுபானக் கடைகளை அகற்ற தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.