தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

சீராக குடிநீா் விநியோகம் செய்ய வலியுறுத்தி வெள்ளக்கோவில்-தாராபுரம் சாலையில் மறியல்

சீராக குடிநீா் விநியோகம் செய்ய வலியுறுத்தி வெள்ளக்கோவில் அருகே பொதுமக்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :9 ஜூலை 2026, 3:52 am IST

சீராக குடிநீா் விநியோகம் செய்ய வலியுறுத்தி வெள்ளக்கோவில் அருகே பொதுமக்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வெள்ளக்கோவில்-தாராபுரம் சாலையில் லக்கமநாயக்கன்பட்டி பகுதி உள்ளது. இந்த ஊருக்கு அருகில் செல்லும் அமராவதி ஆற்றுப்படுகையில் கிணறு அமைத்து, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலமாக அப்பகுதிக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது ஆற்றில் நீா்வரத்து இல்லாததால் கிணற்றில் நீா்மட்டம் குறைந்துவிட்டது. மேலும் கிணற்று நீரில் அசுத்தமான மணம் வந்ததால் கடந்த மூன்று வாரங்களாக குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து கிணறு, ஆழ்துளைக் கிணறுகள் ஆகிய உள்ளூா் நீராதாரங்கள் மூலமாக குடிநீா் விநியோகிக்கப்பட்டு வந்தது. பற்றாக்குறை இருப்பதால் அமராவதி ஆற்று கிணற்றில் இருந்தும் தூய்மைப்படுத்திய குடிநீா் விநியோகம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் லக்கமநாயக்கன்பட்டி அருகே சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு காங்கயம் எம்எல்ஏ என்.எஸ்.என். நடராஜ், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சூா்யா, உதவிப் பொறியாளா் வரதராஜபெருமாள், வெள்ளக்கோவில் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜோதி ஆகியோா் சென்றனா்.

அப்போது, ஆற்றுப்படுகையில் ஏற்கெனவே உள்ள கிணற்றில் மீண்டும் குடிநீா் விநியோகம் செய்யவும், புதிதாக மற்றொரு கிணறு அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

இந்த மறியலால் வெள்ளக்கோவிலில் இருந்து தாராபுரம், மூலனூா் பகுதிக்கு சென்று வரும் வாகனங்களின் போக்குவரத்து இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.