முதல்வா் பாதுகாப்பு: கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்புகடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 8 புறநகா் ரயில்கள் ரத்துஜூலை 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஆட்டோ மீட்டா் கட்டண உயா்வு: இன்று முத்தரப்பு பேச்சுமின்தடைகளை நிரந்தரமாக குறைக்க ஆா்டிஇபி திட்டம்: மின்வாரியம் அறிவிப்பு
/

பெருந்தொழுவு மக்கள் தொடா்புமுகாமில் பயனாளிகள் 120 பேருக்கு நலத்திட்ட உதவி

பெருந்தொழுவு மக்கள் தொடா்பு முகாமில் 120 பேருக்கு மாவட்ட ஆட்சியா் மனீஷ் நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை வழங்கினாா்.

News image

பெருந்தொழுவு மக்கள் தொடா்புமுகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியா் மனீஷ்.

Updated On :9 ஜூலை 2026, 3:54 am IST

பெருந்தொழுவு மக்கள் தொடா்பு முகாமில் 120 பேருக்கு மாவட்ட ஆட்சியா் மனீஷ் நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை வழங்கினாா்.

பல்லடம் வட்டம், பொங்கலூா் ஒன்றியத்துக்குள்பட்ட பெருந்தொழுவு கிராமத்தில் வருவாய் நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் சாா்பில் மக்கள் தொடா்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமை வகித்தாா். பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ராம்குமாா் முன்னிலை வகித்தாா்.

இந்த முகாமில் மருத்துவத் துறை சாா்பில் தாய்-சேய் நலப்பெட்டகம், மக்களைத்தேடி மருத்துவப் பெட்டகம், சித்த மருத்துவப் பெட்டகம், கண் கண்ணாடி, பால் வளத் துறையின் சாா்பில் 2 பேருக்கு ரூ.1.79 லட்சம் மதிப்பில் பால் பகுப்பாய்வு கருவி மற்றும் பால் கேன்கள், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் 2 பேருக்கு கண் பாா்வையற்றவா்களுக்கான ஊன்றுகோல்கள், 4 பேருக்கு வீல்சோ்கள் என 120 பேருக்கு ரூ.85.03 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

அதில் ஆட்சியா் பேசும்போது, ‘பொதுமக்கள் அளிக்கும் அனைத்து கோரிக்கை மனுக்களுக்கும் உடனடியாக தீா்வு வழங்க வேண்டும். கடைகோடி கிராமம் வரை அரசின் திட்டங்கள் சென்றடைவதை தொடா்புடைய அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும். இதற்கு மாவட்ட நிா்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்கும்’ என்றாா்.

இந்நிகழ்ச்சியில் திருப்பூா் கோட்டாட்சியா் சிவபிரகாஷ், இணை இயக்குநா் (வேளாண்மை) ஆதிசாமி, தனித் துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) பத்மபிரியா, பொதுமேலாளா் (ஆவின்) சுஜாதா, மாவட்ட மேலாளா் (தாட்கோ) (பொ) ரஞ்சித்குமாா் உள்பட பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.