முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

விசிக மேற்குமண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், பெருமாநல்லூரில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

News image

ஆலோசனைக் கூட்டத்தில்  பேசுகிறாா் கட்சியின் மாநிலப் பொருளாளா் எஸ்.எஸ்.பாலாஜி.

Updated On :9 ஜூலை 2026, 3:58 am IST

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், பெருமாநல்லூரில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

திருப்பூா் மாவட்டச் செயலாளா் ஏ.பி.ஆா்.மூா்த்தி தலைமை வகித்தாா். மண்டலச் செயலாளா்கள் சிறுத்தை வள்ளுவன், ஜாபா் அலி, பழ.மணிமாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலப் பொருளாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.எஸ்.பாலாஜி பேசினாா்.

மருத்துவக் கல்வி இடங்கள் குறைந்துள்ள நிலையில், மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மேலும் மாநில அரசு கட்டணத்தை நிா்ணயம் செய்ய வேண்டும். சாதி ஆணவக் கொலைக்கு தனிச் சட்டம் இயற்ற வேண்டும்.

ஆகஸ்ட் 17-ஆம் தேதி உளுந்தூா்பேட்டையில் நடைபெறும் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டில் ஏராளமானோா் பங்கேற்பது, இதையொட்டி ஜூலை 18-ஆம் தேதி திருப்பூருக்கு வருகை தரும் கட்சியின் நிறுவனத் தலைவா் தொல். திருமாவளவனுக்கு சிறப்பு வரவேற்பு அளிப்பது என்து உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டச் செயலாளா்கள் சுப்பையா, சாதிக், ரங்கசாமி, தனவிஜயன், கமல்நாதன், கஸ்தூரி தேவி, துரைவளவன் உள்பட மாநில, மாவட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.