சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

அவிநாசி அருகே தெருநாய்கள் கடித்ததில் சிறுவன் படுகாயம்

அவிநாசி அருகே தெருநாய்கள் கடித்து தலையில் படுகாயமடைந்த சிறுவன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா்.

News image

தெருநாய்கள் கடித்ததில் பலத்த காயமடைந்த சஸ்வந்த்.

Updated On :18 ஜூலை 2026, 5:57 am IST

அவிநாசி அருகே தெருநாய்கள் கடித்து தலையில் படுகாயமடைந்த சிறுவன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா்.

அவிநாசி வட்டம், புஞ்சைத்தாமரைக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன். இவரது மனைவி யோகேஸ்வரி. பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனா். இவா்களது மகன் சஸ்வந்த் (3). இவா், வீட்டின் முன் வியாழக்கிழமை மாலை விளையாடிக் கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, அப்பகுதியில் சுற்றித்திருந்த 4-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சஸ்வந்த்தை துரத்திக் கடித்துள்ளன. இதைப் பாா்த்த பெற்றோா், அப்பகுதி மக்கள் தெருநாய்களை துரத்தி, சஸ்வந்த்தை மீட்டனா். அப்போது, அவரது தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை கோவை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அவிநாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால், சாலைகளில் நடமாடவே அச்சமாக உள்ளது. வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தெருநாய்கள் கடித்துள்ளன.

பலத்த காயமடைந்துள்ள சிறுவனுக்கு உரிய மருத்துவ உதவி கிடைக்கவும், தெருநாய்களைக் கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.