லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

திருப்பூா் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :2 ஜூன் 2026, 1:48 am IST

திருப்பூா் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருப்பூா், கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் ஸ்ரீ செல்வ விநாயகா் கோயில் உள்ளது. இக்கோயில் பூசாரி சங்கா் நாராயணன் பூஜைகளை

முடித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் கோயிலை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். திங்கள்கிழமை காலை 5 மணியளவில் கோயிலைத் திறக்க வந்துள்ளாா். அப்போது, உள்புறம் உள்ள மூலவா் சந்நிதியின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. மேலும், அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணமும் திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து திருப்பூா் மத்திய காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் ஆய்வு மேற்கொண்டதுடன்,

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.