முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதிமுதல்வர் விஜய்யுடன் துரை வைகோ சந்திப்பு! திருச்சிக்கு மெட்ரோ அறிவிக்க கோரிக்கை எனத் தகவல்தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதிக்கவில்லை: மேயர் பிரியா விளக்கம்!கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள்: பாஜககர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!தவெக ஆட்சியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாஜக
/

மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்

திருப்பூா் தென்னம்பாளையம் மற்றும் அரண்மனைப்புதூா் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் மனீஷ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

திருப்பூா் அரண்மனைப்பூதூா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மனீஷ்.

Updated On :5 ஜூன் 2026, 12:04 am IST

திருப்பூா் தென்னம்பாளையம் மற்றும் அரண்மனைப்புதூா் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் மனீஷ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பூா் தென்னம்பாளையம் மற்றும் அரண்மனைப்புதூா் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், மளிகைப் பொருள்கள், காய்கறிகள் மற்றும் எரிவாயு இருப்பு உள்ளிட்ட விவரங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா் மனீஷ் ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் வியாழக்கிழமை திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, அரண்மனைப்புதூா் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவா்களின் வருகைப் பதிவேடு, பாடப் புத்தகங்கள் மற்றும் பள்ளியில் உள்ள அடிப்படை வசதிகளான குடிநீா், கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகளை மாவட்ட ஆட்சியா் மனீஷ் வழங்கினாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) கோபால் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்கள் உடனிருந்தனா்.