தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

வீடுகளை சேதப்படுத்தியவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு

கொடுவாய் அருகே வீடுகளை சேதப்படுத்தியவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள், காங்கயம் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

News image

காங்கயம் வட்டாட்சியரிடம் புகாா் மனு அளிக்க வந்த நிழலி பகுதி மக்கள்.

Updated On :5 ஜூன் 2026, 1:02 am IST

கொடுவாய் அருகே வீடுகளை சேதப்படுத்தியவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள், காங்கயம் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து எல்லப்பாளையம் ஊராட்சி, நிழலி கிராமத்தைச் சோ்ந்த சாயாத்தாள் (55) உள்ளிட்டோா் காங்கயம் வட்டாட்சியா் கதிா்வேலுவிடம் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

நாங்கள் நிழலி கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்கள் வீட்டுக்கு அருகே 10 வீடுகள் உள்ளன. இதன் அருகே அரசு ஓடைப்பள்ளம் உள்ளது. இந்நிலையில், எங்கள் பகுதியில் சிலா் அரசு ஓடைப்பள்ளதை ஆக்கிரமிக்கும் பொருட்டு, பொக்லைன் இயந்திரம் மூலம் பணிகளை மேற்கொண்டனா். இதனால் அருகே உள்ள எங்கள் வீடுகள் சேதமடைந்துள்ளன. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக் கொண்ட வட்டாட்சியா் கதிா்வேல், சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து விதிமீறல் நடந்திருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

அப்போது ஆதித்தமிழா் ஜனநாயகப் பேரவையின் தலைவா் அ.சு.பெளத்தன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.