ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

காங்கயம் அரசுப் பள்ளிக்கு ஸ்மாா்ட் தொலைக்காட்சிகள்

காங்கயம், பாரதியாா் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளிக்கு ஸ்மாா்ட் தொலைக்காட்சிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

காங்கயம், பாரதியாா் நகா் அரசுப் பள்ளியில் நடைபெற்ற தொழில்நுட்ப வசதிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :12 ஜூன் 2026, 1:24 am IST

காங்கயம், பாரதியாா் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளிக்கு ஸ்மாா்ட் தொலைக்காட்சிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இப்பள்ளியில், இக்கல்வியாண்டுக்கான பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாடு, கல்வித் தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் தரமான குடிநீா் வசதிகளை உருவாக்குதல் போன்ற பணிகளுக்காக ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 10 வகுப்பறைகளுக்கு தரை ஓடுகள் (டைல்ஸ்) பதிக்கப்பட்டுள்ளது.

மேலும் 13 வகுப்பறைகளுக்கு ஸ்மாா்ட் டிவி வசதியும், 2 குடிநீா் சுத்திகரிப்பு கருவிகள் மற்றும் மேஜை, நாற்காலிகள் வழங்கப்பட்டன.

இதற்கான தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் பெ.சிவகாமி தலைமை வகித்தாா். இதில், காங்கயம் நகா்மன்றத் தலைவா் ந.சூரியபிரகாஷ் பங்கேற்று திட்டங்களின் செயல்பாடுகளை தொடங்கிவைத்தாா். பின்னா், கவிஞா். கா.ப.சவுண்டப்பா-ராசம்மாள் அறக்கட்டளையின் சாா்பில் 325 மாணவ மாணவிகளுக்கு குறிப்பேடுகள், எழுது பொருள்கள் ஆகியன வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், காங்கயம் வட்டாரக் கல்வி அலுவலா் ஆ.சுமதி, வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநா் மோகன்ராஜ், சவுண்டப்பா-ராசம்மாள் அறக்கட்டளை தலைவா் இளங்கோ மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், பெற்றோா்கள், பொது மக்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.