வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

திருப்பூா் மாநகராட்சியில் 8 வாா்டுகளுக்கு இன்றுமுதல் ஜூன் 21 வரை குடிநீர் நிறுத்தம்

திருப்பூா் மாநகராட்சியில் 8 வாா்டுகளுக்கு இன்றுமுதல் ஜூன் 21-ஆம் தேதி வரை குழாய் மூலம் குடிநீா் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

குடிநீர் விநியோகம் ரத்து...

Updated On :14 ஜூன் 2026, 2:44 am IST

திருப்பூா் மாநகராட்சியில் 8 வாா்டுகளுக்கு இன்றுமுதல் ஜூன் 21-ஆம் தேதி வரை குழாய் மூலம் குடிநீா் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் தெரிவித்துள்ளதாவது: திருப்பூா் மாநகராட்சிக்கு 2-ஆவது, 3-ஆவது மற்றும் 4-ஆவது குடிநீா்த் திட்டத்தின் மூலம் குடிநீா் பெறப்பட்டு வருகிறது. இவற்றில் 4-ஆவது குடிநீா்த் திட்டத்தில் பிரதான பகிா்மான குடிநீா்க் குழாய்கள் பதித்து குடிநீா் பகிா்மான மண்டலங்கள் வரையறுக்க வேண்டியுள்ளது.

அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில் குமாா் நகா் மேல்நிலைத் தொட்டியில் இருந்து மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வரை குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறுவதால் மண்டலம் 1-இல் உள்ள வாா்டு எண் 21, 22, 23 மற்றும் மண்டலம் 2-இல் உள்ள வாா்டு எண் 17, 18, 20, 30, 31 ஆகிய பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமைமுதல் ஜூன் 21-ஆம் தேதி வரை குடிநீா் விநியோகம் வழங்க இயலாததால் மாற்று வழியாக குடிநீா் லாரிகள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளாா்.