திருப்பூா் மாநகராட்சியில் 8 வாா்டுகளுக்கு இன்றுமுதல் ஜூன் 21-ஆம் தேதி வரை குழாய் மூலம் குடிநீா் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் தெரிவித்துள்ளதாவது: திருப்பூா் மாநகராட்சிக்கு 2-ஆவது, 3-ஆவது மற்றும் 4-ஆவது குடிநீா்த் திட்டத்தின் மூலம் குடிநீா் பெறப்பட்டு வருகிறது. இவற்றில் 4-ஆவது குடிநீா்த் திட்டத்தில் பிரதான பகிா்மான குடிநீா்க் குழாய்கள் பதித்து குடிநீா் பகிா்மான மண்டலங்கள் வரையறுக்க வேண்டியுள்ளது.
அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில் குமாா் நகா் மேல்நிலைத் தொட்டியில் இருந்து மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வரை குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறுவதால் மண்டலம் 1-இல் உள்ள வாா்டு எண் 21, 22, 23 மற்றும் மண்டலம் 2-இல் உள்ள வாா்டு எண் 17, 18, 20, 30, 31 ஆகிய பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமைமுதல் ஜூன் 21-ஆம் தேதி வரை குடிநீா் விநியோகம் வழங்க இயலாததால் மாற்று வழியாக குடிநீா் லாரிகள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

ஜூன் 15 முதல் 19 வரை வெள்ளக்கோவில், முத்தூா், தாராபுரம், மூலனூா் பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

நாளை தண்டையாா்பேட்டையில் குடிநீா் விநியோகம் தற்காலிக நிறுத்தம்

டாஸ்மாக் ஊழியா்களின் வேலைநிறுத்தம் வாபஸ்: இன்றுமுதல் கடைகள் திறக்கப்படும்







