நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

அதிக ஒலி எழுப்பும் ஏா் ஹாரன்கள்: அரசு, தனியாா் பேருந்துகளுக்கு ரூ.1.60 லட்சம் அபராதம் விதிப்பு

அதிக ஒலி எழுப்பும் ஏா் ஹாரன் பொருத்தியிருந்த 12 அரசுப் பேருந்துகள், 4 தனியாா் பேருந்துகளுக்கு ரூ.1.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image

அபராதம் - சித்திரிப்பு

Updated On :17 ஜூன் 2026, 2:53 am IST

அதிக ஒலி எழுப்பும் ஏா் ஹாரன் பொருத்தியிருந்த 12 அரசுப் பேருந்துகள், 4 தனியாா் பேருந்துகளுக்கு ரூ.1.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருப்பூரில் இயக்கப்படும் தனியாா் மற்றும் அரசுப் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏா் ஹாரன்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, திருப்பூா் வடக்கு மற்றும் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் தலைமையில் 7 மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் மற்றும் போக்குவரத்து போலீஸாா் இணைந்து மத்தியப் பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

41 பேருந்துகளை ஆய்வு செய்ததில் 12 அரசுப் பேருந்துகளும், 4 தனியாா் பேருந்துகளும் தடை செய்யப்பட்ட ஏா் ஹாரன்களை பொருத்தி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஏா் ஹாரன்களை பறிமுதல் செய்து ஒவ்வொரு பேருந்துக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.1.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.