எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

விற்பனைக்காக கஞ்சா பதுக்கிய 3 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :1 மார்ச் 2026, 7:38 pm

திருப்பூரில் போலீஸாா் நடத்திய சோதனையில் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா், ஆத்துப்பாளையம் பகுதியில் 15 வேலம்பாளையம் போலீஸாா் சனிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக நடந்து வந்த 3 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்ததில், அவா்கள் ஒடிஸாவைச் சோ்ந்த மிா்சா ஜாகீா் உசேன் (38), விகாஸ் ஹரிபால் (25), பிகாரை சோ்ந்த சதீஷ்குமாா் (31) ஆகியோா் என்பதும், விற்பனைக்காக கஞ்சா பதுக்கிவைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.