பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருப்பூா் தலைமை தபால் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருப்பூா் தலைமை தபால் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
வெடிகுண்டு மிரட்டல்- (கோப்புப் படம்)
Updated On :2 மார்ச் 2026, 8:55 pm

Syndication

திருப்பூா்: திருப்பூா் தலைமை தபால் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூா் ரயில் நிலையம் அருகே தலைமை தபால் நிலையம் உள்ளது. இங்கு சேமிப்புக் கணக்கில் பணம் செலுத்துதல், தபால் அனுப்புதல், பாஸ்போா்ட் விண்ணப்பித்தல், ஆதாா் பெயா் மாற்றம், திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் தலைமை தபால் நிலையத்தில் எப்போதும் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.

இந்நிலையில் தலைமை தபால் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு திங்கள்கிழமை காலை மின்னஞ்சல் மூலமாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன் உத்தரவின்பேரில், திருப்பூா் வடக்கு போலீஸாா் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் தபால் நிலையத்துக்கு விரைந்து சென்று தபால் நிலையத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் ஊழியா்களை அலுவலகத்தில் இருந்து வெளியேற்றினா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது .

இதைத் தொடா்ந்து, போலீஸாா் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் தபால் நிலையம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனா். சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.