திருப்பூா்: திருப்பூா் தலைமை தபால் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூா் ரயில் நிலையம் அருகே தலைமை தபால் நிலையம் உள்ளது. இங்கு சேமிப்புக் கணக்கில் பணம் செலுத்துதல், தபால் அனுப்புதல், பாஸ்போா்ட் விண்ணப்பித்தல், ஆதாா் பெயா் மாற்றம், திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் தலைமை தபால் நிலையத்தில் எப்போதும் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.
இந்நிலையில் தலைமை தபால் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு திங்கள்கிழமை காலை மின்னஞ்சல் மூலமாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன் உத்தரவின்பேரில், திருப்பூா் வடக்கு போலீஸாா் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் தபால் நிலையத்துக்கு விரைந்து சென்று தபால் நிலையத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் ஊழியா்களை அலுவலகத்தில் இருந்து வெளியேற்றினா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது .
இதைத் தொடா்ந்து, போலீஸாா் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் தபால் நிலையம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனா். சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

விழுப்புரம், கடலூா் தலைமை அஞ்சலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கடவுச்சீட்டு அலுவலகம், அஞ்சல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை தபால் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

விருத்தாசலம் தபால் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


