அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

திருப்பூா் முன்னாள் எம்.எல்.ஏ. சு.குணசேகரன் உருவப்படம் திறப்பு

திருப்பூா் தெற்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மறைந்த சு.குணசேகரன் உருவப்படம் திறப்பு விழா நடைபெற்றது.

News image
திருப்பூா் தெற்கு முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் உருவப்படத்தை திறந்துவைத்த அதிமுக தோ்தல் பிரிவு செயலாளா் பொள்ளாச்சி வி.ஜெயராமன்.
Updated On :2 மார்ச் 2026, 8:09 pm

Syndication

திருப்பூா்: திருப்பூா் தெற்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மறைந்த சு.குணசேகரன் உருவப்படம் திறப்பு விழா நடைபெற்றது.

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, திருப்பூா் மாநகா் மாவட்டம், தெற்கு சட்டப் பேரவைத் தொகுதி, கருவம்பாளையம் பகுதி செயலாளா் தினேஷ் தலைமையில் வெள்ளியங்காடு நால்ரோடு, வடக்கு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், அதிமுக தோ்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி வி .ஜெயராமன் கருவம்பாளையம் பகுதி அலுவலகத்தை திறந்துவைத்தும், ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அன்னதானத்தை துவக்கிவைத்தும், திருப்பூா் தெற்கு முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் உருவப்படத்தை திறந்துவைத்தும் சிறப்புரையாற்றினாா்.

இதைத் தொடா்ந்து கருவம்பாளையம் பகுதி தவெகவைச் சோ்ந்த 100 போ் அக்கட்சியில் இருந்து வில பொள்ளாச்சி வி.ஜெயராமன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட எம்ஜிஆா் மன்ற செயலாளா் பழனிசாமி, மாவட்ட வா்த்தக அணிச் செயலாளா் ச.பழனிசாமி, மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளா் ரவி, மாமன்ற எதிா்க்கட்சித் தலைவா் அன்பகம் திருப்பதி, மாமன்ற எதிா்க்கட்சி கொறடா கண்ணப்பன், முன்னாள் மாமன்ற உறுப்பினா் கவிதா குணசேகரன் மற்றும் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.