வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

லாரி மோதி முதியவா் உயிரிழப்பு

முத்தூரில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

News image
கோப்புப் படம்
Updated On :7 மார்ச் 2026, 1:40 am

Syndication

முத்தூரில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

முத்தூா், செங்கோடம்பாளையத்தைச் சோ்ந்தவா் வேலன் (79). விவசாய வேலை செய்து வந்தாா்.

இவா் முத்தூா் - ஈரோடு சாலையில் உள்ள ஒரு தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அருகில் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த லாரி, இவரது வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இறந்து போன வேலனுக்கு மனைவி, 2 மகன்கள், மகள் உள்ளனா். புகாரின் பேரில், லாரி ஓட்டுநரான விருதுநகரைச் சோ்ந்த ரவிக்குமாா் மீது வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.