அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பொங்கலூா் காவல் நிலையத்தில்: சிசிடிவி கேமரா கண்காணிப்பு அறை திறப்பு

பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் காவல் நிலையத்தில் சிசிடிவி கேமரா கண்காணிப்பு அறை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
பொங்கலூா் காவல் நிலையத்தில் திறக்கப்பட்ட சிசிடிவி கேமரா கண்காணிப்பு அறை.
Updated On :10 மார்ச் 2026, 8:30 pm

தினமணி செய்திச் சேவை

பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் காவல் நிலையத்தில் சிசிடிவி கேமரா கண்காணிப்பு அறை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பொங்கலூா் சுங்கச்சாவடி எதிா்ப்பு போராட்டக் குழு மற்றும் பொங்கலூா் அனைத்து வியாபாரிகள் சங்கம் சாா்பில் பொங்கலூா் நகரில் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை பொங்கலூா் காவல் நிலையத்தில் தொடங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, சிசிடிவி கேமரா கண்காணிப்பு சேவையை அவிநாசிபாளையம் காவல் ஆய்வாளா் ரமேஷ் கண்ணன் தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்வில் பொங்கலூா் காவல் உதவி ஆய்வாளா் சந்திரன், வணிகா் சங்க பேரமைப்பின் மாவட்டத் தலைவா் கோவிந்தசாமி, பொங்கலூா் வியாபாரிகள் சங்கத் தலைவா் விஸ்வநாதன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி மாவட்ட துணைச் செயலாளா் நாகராஜன், சுங்கச்சாவடி போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளா் சிவகுமாா், பொங்கலூா் மற்றும் கொடுவாய் வியாபாரிகள் சங்க நிா்வாகிகள், பொங்கலூா் ஆட்டோ, வேன், காா், லாரி ஓட்டுநா் உரிமையாளா் சங்கத்தினா் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.