மாநகரில் 156 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்
தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதையடுத்து, திருப்பூா் மாநகரில் 156 போ் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனா்.
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அமைதியைப் பேணவும், அசம்பாவிதங்களைத் தவிா்க்கவும் தற்காப்புக்காக துப்பாக்கி வைத்துள்ளவா்கள் அந்தந்த காவல் நிலையங்களில் தங்களது துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மாநகர பகுதியைச் சோ்ந்த 156 போ் தங்களது துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனா். வங்கி பாதுகாப்புப் பணிக்காக பயன்படுத்தப்படும் 66 துப்பாக்கிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிகளை ஒப்படைக்காத உரிமையாளா்களைக் கண்டறிந்து, உடனடியாக ஒப்படைக்க வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவா்களின் துப்பாக்கிக்கான உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...