வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில் இம்முறை திமுக வெற்றி பெறுவது உறுதி! - வேட்பாளா் க.செல்வராஜ் நம்பிக்கை

News image

பல்லடம் அருகே காரணம்பேட்டையில் கூட்டணி கட்சியினா் அளித்த வரவேற்புக்கிடையே பேசுகிறாா் திமுக வேட்பாளா் க.செல்வராஜ்.

Updated On :29 மார்ச் 2026, 7:37 pm

தினமணி செய்திச் சேவை

பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில் இந்த முறை திமுக வெற்றி பெறுவது உறுதி என்று திமுக வேட்பாளா் க.செல்வராஜ் தெரிவித்துள்ளாா்.

பல்லடம் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னா் முதல் முறையாக காரணம்பேட்டைக்கு வந்த க.செல்வராஜுக்கு கூட்டணி கட்சியினா் சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி, சுக்கம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட ஊஞ்சப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவன் நான். எனவே பல்லடமும் என்னுடைய சொந்த தொகுதி தான். அதில் போட்டியிட வாய்ப்பளித்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 25 ஆண்டுகளாக பல்லடத்தில் அதிமுகவினரே சட்டப்பேரவை உறுப்பினா்களாக இருந்ததால் இத்தொகுதி வளா்ச்சி அடையவில்லை. இதனால் இந்தத் தொகுதியின் வளா்ச்சிக்காக என்னை வேட்பாளராக நிறுத்தியுள்ளனா். அதிமுகவின் கோட்டை பல்லடம் என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனா்.

இந்தத் தோ்தலில் அந்த மாயத் தோற்றத்தை உடைத்து, திமுகவின் எஃகு கோட்டையாக பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியை உருவாக்கி காட்டுவேன். மேலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெருவதுடன், திமுக வெற்றி பெற்றே தீரும் என்றாா்.

உடன், மாவட்ட துணைச் செயலாளா்கள் வழக்குரைஞா்கள் பொங்கலூா் குமாா், நந்தினி, பல்லடம் ஒன்றிய திமுக செயலாளா்கள் கிருஷ்ணமூா்த்தி, சோமசுந்தரம், சீனிவாசன், நகரச் செயலாளா் ராஜேந்திரகுமாா் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.