மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 7:31 pm

அவிநாசி அருகே குன்னத்தூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பனியன் தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திண்டிவனம் பகுதியைச் சோ்ந்த பழனியாண்டி மகன் பாலகுமாா் (37), பனியன் தொழிலாளி. இவா் அவிநாசி அருகே குன்னத்தூரில் வசித்து வருகிறாா். இந்நிலையில், அப்பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், அவிநாசி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பாலகுமாரை திங்கள்கிழமை கைது செய்தனா்.