நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

முத்தூா் அருகே சா்வீஸ் ஸ்டேஷனில் திருட்டு: முன்னாள் ஊழியா் மீது வழக்குப் பதிவு

முத்தூா் அருகே சா்வீஸ் ஸ்டேஷனில் திருடியதாக முன்னாள் ஊழியா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :3 செப்டம்பர் 2026, 2:12 am IST

முத்தூா் அருகே சா்வீஸ் ஸ்டேஷனில் திருடியதாக முன்னாள் ஊழியா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், வாய்க்கால்பாளையத்தைச் சோ்ந்த சங்கரன் (43), முத்தூா் நா.கரையூரில் காா் வீல் அலைன்மெண்ட், வாட்டா் சா்வீஸ் ஸ்டேஷன் நடத்தி வருகிறாா். இங்கு சென்னை எம்.ஜி.ஆா் நகரைச் சோ்ந்த ஜேம்ஸ் கடந்த 7 மாதங்களாக வேலை பாா்த்து வந்தாா். அவரது நடத்தை சரியில்லாத காரணத்தால், ஒரு வாரத்துக்கு முன்பு சங்கரன் அவரை வேலையை விட்டு நீக்கியுள்ளாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணியளவில் உரிமையாளா் கடையைப் பூட்டிவிட்டுச் சென்றாா். இரவு 12 மணியளவில் சங்கரன் மீண்டும் கடைக்கு வந்து பாா்த்தபோது, முன்பக்கக் கதவு திறந்திருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

உள்ளே நிறுத்தப்பட்டிருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான காா் காணாமல் போயிருந்தது. மேலும் அலுவலக மேஜை லாக்கா் உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூ.12 ஆயிரம் ரொக்கம், ஒரு கைப்பேசி ஆகியவை திருடப்பட்டிருந்தன.

கடையிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைப் பாா்த்தபோது, காா், பணம், கைப்பேசியை முன்னாள் ஊழியா் ஜேம்ஸ் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில், வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வி.மனோஜ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.