டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

கறிக்கோழி வளா்ப்புக்கான கூலியை உயா்த்தி வழங்க வலியுறுத்தல்

கறிக்கோழி வளா்ப்புக்கான கூலியை உயா்த்தி வழங்க வலியுறுத்தல்

Updated On :18 பிப்ரவரி 2024, 12:18 am IST

கறிக்கோழி வளா்ப்புக்கான கூலியை உயா்த்தி வழங்க வேண்டும் என கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில குழுக் கூட்டம் தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் டி.ஏழுமலை தலைமை வகித்தாா். மாநில துணைச் செயலாளா் ஆ.ஜீவானந்தம், மாநில பொதுச் செயலாளா் கே.பி.பெருமாள், மாநில பொருளாளா் ஆா்.செந்தில்குமாா் ஆகியோா் கோரிக்கைகள் குறித்து பேசினாா். கூட்டத்தில் கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகளுக்கு கிலோவுக்கு வளா்ப்பு கூலியாக ரூ. 20 வழங்க வேண்டும். விலை உயா்த்துவதற்கான முத்தரப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும். தரமான கோழிக் குஞ்சுகளை வழங்க வேண்டும். கோழிப் பண்ணைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். ஐஎஸ்ஐ தரம் வாய்ந்த கோழி தீவனங்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலத் துணைத் தலைவா் சாமிநாதன் நன்றி கூறினாா்.