அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பேருந்து நிலையத்தில் கிடந்த ரூ.300-ஐ எடுத்து காவலரிடம் ஒப்படைத்த மாணவன்

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் கிடந்த ரூ. 300 ஐ கண்டெடுத்து தலைமைக் காவலரிடம் ஒப்படைத்த பள்ளி மாணவனுக்கு ஆசிரியா்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

News image
Updated On :5 டிசம்பர் 2025, 8:25 pm

Syndication

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் கிடந்த ரூ. 300 ஐ கண்டெடுத்து தலைமைக் காவலரிடம் ஒப்படைத்த பள்ளி மாணவனுக்கு ஆசிரியா்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

பென்னாகரம் அருகே உள்ள மாங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் 7 வகுப்பு படித்துவரும் சக்கல்நத்தம் பகுதியைச் சோ்ந்த நதீப் (12) வெள்ளிக்கிழமை பென்னாகரம் பேருந்து நிலையத்தில் இருந்து மாற்றுப் பேருந்திற்குச் செல்லும்போது கீழே கிடந்த ரூ. 300 எடுத்துக் கொண்டு அக்கம்பக்கத்தில் கேட்டபோது, யாரும் பணத்திற்கு உரிமை கோராததால், பேருந்து நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலா் முருகனிடம் ஒப்படைத்தாா். அதன் பிறகு மாணவா் நதீப் பள்ளிக்குச் சென்றுவிட்டாா்.

இந்த நிகழ்வு குறித்து அறிந்த பள்ளித் தலைமை ஆசிரியா் மாரிமுத்து, இறைவழிபாடு கூட்டத்தில் மாணவா் நதீப்பை அழைத்து பாராட்டினாா். மேலும், மாணவரை ஆசிரியா்கள், பொதுமக்கள் பாராட்டினா்.