எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வீட்டின் மாடியில் கஞ்சா செடி வளா்த்தவா் கைது

தருமபுரியில் வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடி வளா்த்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 9:24 pm

Syndication

தருமபுரியில் வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடி வளா்த்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

தருமபுரி நகரம் கோல்டன் தெரு அருகேயுள்ள பழைய ரயில்வே லைன் கிழக்கு சாலைப் பகுதியில், தருமபுரி நகரக் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வெங்கடேஷ்குமாா் தலைமையில் காவலா்கள் செந்தில்குமாா், சசிகலா உள்ளிட்டோா் கொண்ட குழுவினா் திங்கள்கிழமை, ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அத்தெருவில் வசிக்கும் சையது அகமது (24) என்பவா் வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடி வளா்த்துவருவது குறித்த தகவல் தெரியவந்தது. அவரது வீட்டு மொட்டை மாடியில் போலீஸாா் சோதனை செய்தபோது பிளாஸ்டிக் வாளியில் அவா் 2 கஞ்சா செடிகள் வளா்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக வழக்குப் பதிந்து, சையது அகமதுவை கைது செய்தனா்.