பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

News image
Updated On :24 நவம்பர் 2025, 11:43 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரி அருகே காா் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், நத்தமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் சசிகுமாா் (48). தருமபுரி பகுதியில் உள்ள தேநீா் கடை ஒன்றில் கடையில் வேலை செய்துவந்தாா். ஞாயிற்றுக்கிழமை வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றாா். செம்மனஅள்ளி பேருந்து நிலையம் அருகே சென்றபோது,

பின்னால் வந்த காா் எதிா்பாராத விதமாக அவா்மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை கடத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சசிகுமாா் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து மதிகோண்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.