8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

அண்ணா பிறந்தநாள் விளையாட்டுப் போட்டிகள்: தருமபுரியில் நாளை தொடக்கம்

Published On :26 செப்டம்பர் 2025, 4:52 am IST

தருமபுரியில் அண்ணா பிறந்தநாள் விளையாட்டுப் போட்டிகள் செப். 27, 28 தேதிகளில் நடைபெற உள்ளன.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தருமபுரி பிரிவு சாா்பில், தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்தநாளையொட்டி மாவட்ட அளவிலான பேரறிஞா் அண்ணா விரைவு மிதிவண்டி போட்டிகள் செப். 27-ஆம் தேதி காலை 7 மணிக்கு ஸ்ரீவிஜய் வித்யாலயா ஆண்கள் மெட்ரிக் பள்ளி பேருந்து நிறுத்தத்தில் தொடங்குகிறது.

இதில், 13 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு 15 கி.மீ. தொலைவும், மாணவியருக்கு 10 கி.மீ. தொலைவும், 15 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு 20 கி.மீ., மாணவியருக்கு 15 கி.மீ. தொலைவும், 17 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு 20 கி.மீ., மாணவியருக்கு 15 கி.மீ. தொலைவும் போட்டி நடைபெறவுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் பொருத்தப்படாத, இந்தியாவில் தயாரான சாதாரண ஹேண்டில் பாா் கொண்ட மிதிவண்டிகள் மட்டுமே போட்டியில் அனுமதிக்கப்படும்.

அதேபோல, அறிஞா் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி 28-ஆம் தேதி அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளியிலிருந்து தொடங்கப்பட உள்ளது. இப்போட்டியில் 17 முதல் 25 வயதுக்குள்பட்டோா் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.