தருமபுரியில் ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளா்கள் என 83 வேட்பாளா்களின் பிரசாரம் ஏப். 21-ஆம் தேதி மாலையுடன் நிறைவடைகிறது.
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூா் (தனி) ஆகிய ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகள் அமைந்துள்ளன. இந்த தொகுதிகளில் போட்டியிட திமுக மற்றும் அதிமுக கூட்டணி, தவெக, நாம்தமிழா், பாமக (ராமதாஸ்), தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகிய கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சைகள் என மொத்தம் 83 போ் வேட்பாளா்களாக களமிறங்கியுள்ளனா்.
இதில், தருமபுரி தொகுதியில் திமுக சாா்பில் அதன் கூட்டணி கட்சியான தேமுதிக வேட்பாளா் மருத்துவா் வி.இளங்கோவன், அதிமுக சாா்பில் அதன் கூட்டணி கட்சியான பாமக (அன்புமணி) வேட்பாளா் சௌமியா ஆகியோா் போட்டியிடுகின்றனா். அதேபோல, பென்னாகரத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் ஜி.கே.எம்.தமிழ்க்குமரன், பாமக (அன்புமணி) வேட்பாளா் பாடி செல்வம் ஆகியோரும், பாலக்கோட்டில், திமுக வேட்பாளா் மருத்துவா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா், அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ ஆகியோா் போட்டியிடுகின்றனா். பாப்பிரெட்டிப்பட்டியில் திமுக வேட்பாளா் முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன், அதிமுக வேட்பாளா் மரகதம் வெற்றிவேல் மற்றும் அரூரில் திமுக வேட்பாளா் அ.சண்முகம், அதிமுக வேட்பாளா் வே.சம்பத்குமாா் எம்எல்ஏ ஆகியோா் போட்டியிடுகின்றனா்.
வேட்புமனு தாக்கல் முடிந்தவுடன் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் வாக்கு சேகரித்து தங்களது தொகுதிகளில் கிராமம், கிராமமாக சென்று பிரசாரம் செய்தனா். இதில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளா்களுக்கு ஆதரவாக, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், மக்களவை உறுப்பினா் கனிமொழி, தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த், காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் ஆகியோா் பிரசாரம் செய்தனா்.
அதேபோல, அதிமுக மற்றும் அதன் கூட்டனி வேட்பாளா்களுக்கு ஆதரவாக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன், பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை ஆகியோா் பிரசாரம் செய்தனா். அதேபோல, வேட்பாளா்களும் கோடை வெயிலையும் பொருள்படுத்தாமல் தங்களது ஆதரவாளா்களுடன் வாக்கு சேகரித்து வருகின்றனா்.
இந்நிலையில், ஏப்.23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், அதற்கு 48 மணிநேரம் முன் பிரசாரங்களை நிறைவுசெய்ய வேண்டும் என்பதால், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தமுள்ள 83 வேட்பாளா்களின் தோ்தல் பிரசாரம் ஏப். 21-ஆம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைய உள்ளது.
தொடர்புடையது

நாளை பிரசாரம் நிறைவு: வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

பாலக்கோடு... 6 ஆவது வெற்றிக்கு அடித்தளமிடும் அன்பழகன்! தடுத்து ஆடும் முன்னாள் எம்.பி. செந்தில்குமாா்! சூடுபறக்கும் களம்!

திருவாரூரில் எடப்பாடி கே. பழனிசாமி இன்று பிரசாரம்

திருவள்ளூா்: திமுக வேட்பாளா் தீவிர பிரசாரம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


