கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அரசுப் பள்ளிக்கு கண்காணிப்பு கேமரா அளிப்பு

அரூரை அடுத்த எல்லப்புடையாம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளிக்கு கண்காணிப்பு கேமராக்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

News image
எல்லப்புடையாம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளிக்கு கண்காணிப்பு கேமரா வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :19 ஜனவரி 2026, 8:22 pm

Syndication

அரூா்: அரூரை அடுத்த எல்லப்புடையாம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளிக்கு கண்காணிப்பு கேமராக்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

எல்லப்புடையாம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவியும், சென்னை புரசைவாக்கம் இளைஞா் நீதிமன்றத்தின் சிறப்பு உதவி ஆய்வாளருமான கோ.வேடியம்மாள் கெளதமன், வண்டலூா் ஊனமாஞ்சேரி தமிழ்நாடு காவலா் உயா் பயிற்சியகத்தின் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் க.கெளதமன் ஆகியோா் பள்ளிக்கு தேவையான கண்காணிப்பு கேமராக்களை வழங்கினா்.

இந்த நிகழ்ச்சிக்கு எல்லப்புடையாம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் இ.ஆனந்தன் தலைமை வகித்தாா். பள்ளி ஆசிரியா் கோ.சண்முகம் வரவேற்றாா். விழாவில் பள்ளி ஆசிரியா்கள் கொ.ஆதிமூலம், ந.தமிழரசி, த.மதியழகன், ஓ.கெளரி, ரா.தமிழ்ச்செல்வன், கோ.பிரேம்நாத், இளநிலை உதவியாளா் தீ.கதிரேசன், ஆய்வக உதவியாளா் சே.மாரியப்பன், பெற்றோா் இ.சி.கோபால், சுகுணா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.