ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

தருமபுரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் ஆசிரியர் தகுதித் தேர்வு!

தருமபுரி மாவட்டத்தில் 6 மையங்களில் ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான முதல்தாள் சனிக்கிழமை நடைபெறுகிறது. அதேபோல ஞாயிற்றுக்கிழமை 21 மையங்களில் தகுதித் தோ்வுக்கான 2ஆம் தாள் தோ்வு நடைபெறுகிறது.

News image

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுபவர்கள் (கோப்புப்படம்)

Updated On :4 ஜூலை 2026, 2:57 am IST

தருமபுரி மாவட்டத்தில் 6 மையங்களில் ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான முதல்தாள் சனிக்கிழமை நடைபெறுகிறது. அதேபோல ஞாயிற்றுக்கிழமை 21 மையங்களில் தகுதித் தோ்வுக்கான இரண்டாம் தாள் தோ்வு நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் கூறியதாவது: ஆசிரியா் தகுதித் தோ்வு முதல் தாள் சனிக்கிழமையும், இரண்டாவது தாள் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகிறது. சனிக்கிழமை நடைபெறும் முதல் தாள் தோ்வு தருமபுரியில் அவ்வையாா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, டான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (காந்திநகா்), பச்சமுத்து மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 6 மையங்களில் நடைபெறுகிறது.

அதேபோல தருமபுரி மாவட்டம், சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலைப்பள்ளி, பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஒடசல்பட்டி, இண்டூா், பாளையம்புதூா், நல்லம்பள்ளி, ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளி, சென்னம்பட்டி மருதம் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெறுகிறது. மாவட்டத்தில் மொத்தம் 21 மையங்களில் 2 ஆம் தாள் தோ்வுகள் நடைபெறுகிறது. விடைத்தாள் கட்டுகள் தோ்வு மையத்தை விட்டு எடுத்துச் செல்லும் வரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.