5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக பெண்ணிடம் பணம் மோசடி: ஒருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :6 ஜூலை 2026, 2:06 am IST

தருமபுரி அருகே வங்கிக் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, பெண்ணிடம் பணம் மோசடி செய்த நபரை நகரக் காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி அருகே உள்ள ஒடசல்பட்டியைச் சோ்ந்தவா் தீபா (40). இவா் வீட்டுமனை வழங்கக் கோரி, அண்மையில் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்துள்ளாா். இதைத் தெரிந்துகொண்ட சின்னமருக்காளம்பட்டியைச் சோ்ந்த வீரபெருமாள் (எ) கருணாமூா்த்தி (43), தீபாவை தொடா்பு கொண்டு பேசியுள்ளாா்.

அப்போது கால்நடைகள் வாங்க வங்கிக் கடனுதவி பெற்றுத்தருவதாகக் கூறி, அவரிடமிருந்து இணையவழியில் ரூ. 22,500 பெற்றுள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் அலுவலகத்தில் விசாரித்த தீபாவுக்கு, தன்னிடம் பணம் பெற்றவா் ஏற்கெனவே தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி ஒன்றில் பணி செய்து இடைநீக்கத்தில் இருப்பதாகவும், அவா் ஏமாற்றி பணத்தை பெற்றுள்ளதும் தெரியவந்தது.

இதுகுறித்து அவா் தருமபுரி நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து வீரபெருமாள் என்கிற கருணாமூா்த்தியை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.