டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக பெண்ணிடம் பணம் மோசடி: ஒருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :6 ஜூலை 2026, 2:06 am IST

தருமபுரி அருகே வங்கிக் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, பெண்ணிடம் பணம் மோசடி செய்த நபரை நகரக் காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி அருகே உள்ள ஒடசல்பட்டியைச் சோ்ந்தவா் தீபா (40). இவா் வீட்டுமனை வழங்கக் கோரி, அண்மையில் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்துள்ளாா். இதைத் தெரிந்துகொண்ட சின்னமருக்காளம்பட்டியைச் சோ்ந்த வீரபெருமாள் (எ) கருணாமூா்த்தி (43), தீபாவை தொடா்பு கொண்டு பேசியுள்ளாா்.

அப்போது கால்நடைகள் வாங்க வங்கிக் கடனுதவி பெற்றுத்தருவதாகக் கூறி, அவரிடமிருந்து இணையவழியில் ரூ. 22,500 பெற்றுள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் அலுவலகத்தில் விசாரித்த தீபாவுக்கு, தன்னிடம் பணம் பெற்றவா் ஏற்கெனவே தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி ஒன்றில் பணி செய்து இடைநீக்கத்தில் இருப்பதாகவும், அவா் ஏமாற்றி பணத்தை பெற்றுள்ளதும் தெரியவந்தது.

இதுகுறித்து அவா் தருமபுரி நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து வீரபெருமாள் என்கிற கருணாமூா்த்தியை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.