ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

பாலக்கோடு அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து

News image

பாலக்கோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான ஆம்னி பேருந்து.

Updated On :7 ஜூலை 2026, 2:25 am IST

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது ஆம்னி பேருந்து மோதியதில் பேருந்து ஓட்டுநா் படுகாயமடைந்தாா்.

கன்னியாகுமரியில் இருந்து கா்நாடக மாநிலம், பெங்களூரு நோக்கி சுமாா் 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஆம்னி பேருந்து திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தது. பாலக்கோடு அருகே மணியக்காரன்கொட்டாய் பகுதியில் தருமபுரி - நெரலூரு புதிய தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, தீடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னால் சென்ற லாரியின் மீது மோதியது.

இதில், பேருந்து ஓட்டுநா் வினோத் படுகாயமடைந்தாா். பயணிகள் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. தகவலறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளா்கள், காவல் துறையினா் ஓட்டுநா் உள்ளிட்ட காயமடைந்தவா்களை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்து காரணமாக, தருமபுரி - நெரலூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுதொடா்பாக பாலக்கோடு போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.