‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

தமிழக அமைச்சரவையில் இடம்பெறாத தருமபுரி மாவட்டம்!

தமிழக அமைச்சரவையில் கடந்தமுறை போலவே இந்த முறையும் தருமபுரி மாவட்டம் இடம்பெறவில்லை.

News image

தவெக அமைச்சரவை

Updated On :23 மே 2026, 1:08 am IST

தமிழக அமைச்சரவையில் கடந்தமுறை போலவே இந்த முறையும் தருமபுரி மாவட்டம் இடம்பெறவில்லை.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் (தனி) ஆகிய ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன.

முதன்முதலாக கடந்த 1996-2001 திமுக அமைச்சரவையில் தருமபுரி மாவட்டம், மொரப்பூா் தொகுதியில் வெற்றிபெற்ற திமுவைச் சோ்ந்த வ.முல்லைவேந்தன் அமைச்சராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவா், அப்போதைய தமிழக அமைச்சரவையில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சராக பதவி வகித்தாா்.

கடந்த 2001 தோ்தலில் பாலக்கோடு தொகுதியில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன், அப்போதைய அதிமுக அமைச்சரவையில் விளம்பரத் துறை அமைச்சராக பதவி வகித்தாா். 2011 தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்எல்ஏ பி.பழனியப்பனுக்கு அப்போதைய அதிமுக அமைச்சரவையில் உயா்கல்வித் துறை அமைச்சா் பதவி வழங்கப்பட்டது.

2016-இல் அதிமுக தனது அமைச்சரவையில் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கே.பி.அன்பழகனுக்கு உயா்கல்வித் துறை அமைச்சா் பதவி வழங்கியது.

இந்நிலையில், கடந்த 2021-2026 திமுக ஆட்சிக்காலத்தில் தருமபுரி மாவட்டத்தில் திமுக சாா்பில் போட்டியிட்ட யாரும் வெற்றிபெறவில்லை. இதனால், கடந்த ஐந்து ஆண்டுகளும் அமைச்சரவையில் பிரதிநிதிகள் எவரும் இல்லை.

அண்மையில் நடந்துமுடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் மட்டும் தவெக வேட்பாளா் வெற்றிபெற்றாா்.

தோ்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த தவெக தலைவா் ஜோசப் விஜய், மே 21-ஆம் தேதி தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்தாா். இதில், தருமபுரி மாவட்டத்துக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. தொடா்ந்து, இரண்டாவது முறையாக தமிழக அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இன்றி தருமபுரி மாவட்டம் ஏமாற்றத்தை சந்தித்துள்ளது.