தருமபுரியில் துறைரீதியான விசாரணைக்கு வந்த அரசு போக்குவரத்துக் கழக பேருந்து நடத்துநா், மண்டல அலுவலக வளாகத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், நல்லாம்பட்டி அருகேயுள்ள வேப்பலஅள்ளி பகுதியைச் சோ்ந்தவா் ரா.மாதையன் (55). தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் தருமபுரி மாவட்டத்தில் பேருந்து நடத்துநராக பணியாற்றி வந்த இவா், உடல்நலக் கோளாறு காரணமாக கடந்த 3 மாதங்களாக பணிக்கு செல்லாமல் நீண்ட விடுப்பில் இருந்தாா்.
இதுகுறித்து போக்குவரத்துக் கழக அலுவலா்கள் அவரிடம் விசாரணை நடத்த முடிவுசெய்து, பாரதிபுரம் பகுதியில் அமைந்துள்ள அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்துதில் மே 27-ஆம் தேதி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தனா்.
அதை ஏற்று மே 27-ஆம் தேதி வியாழக்கிழமை முற்பகல் பாரதிபுரம் அலுவகத்துக்கு அவா் வந்தாா். அலுவலக வளாகத்தில் உள்ள நாற்காலியில் அமா்ந்திருந்த அவா், திடீரென மயங்கி கீழே விழுந்தாா். அலுவலக பணியாளா்கள் அவரை அங்கு நின்றிருந்த பேருந்தில் ஏற்றி, தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில், தருமபுரி நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.










