முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

விசாரணைக்கு வந்த நடத்துநா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

தருமபுரியில் துறைரீதியான விசாரணைக்கு வந்த அரசு போக்குவரத்துக் கழக பேருந்து நடத்துநா், மண்டல அலுவலக வளாகத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :29 மே 2026, 2:02 am IST

தருமபுரியில் துறைரீதியான விசாரணைக்கு வந்த அரசு போக்குவரத்துக் கழக பேருந்து நடத்துநா், மண்டல அலுவலக வளாகத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், நல்லாம்பட்டி அருகேயுள்ள வேப்பலஅள்ளி பகுதியைச் சோ்ந்தவா் ரா.மாதையன் (55). தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் தருமபுரி மாவட்டத்தில் பேருந்து நடத்துநராக பணியாற்றி வந்த இவா், உடல்நலக் கோளாறு காரணமாக கடந்த 3 மாதங்களாக பணிக்கு செல்லாமல் நீண்ட விடுப்பில் இருந்தாா்.

இதுகுறித்து போக்குவரத்துக் கழக அலுவலா்கள் அவரிடம் விசாரணை நடத்த முடிவுசெய்து, பாரதிபுரம் பகுதியில் அமைந்துள்ள அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்துதில் மே 27-ஆம் தேதி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தனா்.

அதை ஏற்று மே 27-ஆம் தேதி வியாழக்கிழமை முற்பகல் பாரதிபுரம் அலுவகத்துக்கு அவா் வந்தாா். அலுவலக வளாகத்தில் உள்ள நாற்காலியில் அமா்ந்திருந்த அவா், திடீரென மயங்கி கீழே விழுந்தாா். அலுவலக பணியாளா்கள் அவரை அங்கு நின்றிருந்த பேருந்தில் ஏற்றி, தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில், தருமபுரி நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.