பொன். ராதாகிருஷ்ணன் நாளை திருச்செங்கோடு வருகை

திருச்செங்கோடு, ஜன.8: பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தாமரை யாத்திரையின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை திருச்செங்கோடு வருகிறார். இது குறித்து தாமரை யாத்திரை பொறுப்பாளர் எஸ்.டி. ரா
Updated on
1 min read

திருச்செங்கோடு, ஜன.8: பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தாமரை யாத்திரையின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை திருச்செங்கோடு வருகிறார்.

இது குறித்து தாமரை யாத்திரை பொறுப்பாளர் எஸ்.டி. ராமலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்ட எல்லையான பள்ளிபாளையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவருக்கு கட்சியின் மாவட்டத் தலைவர் மனோகர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. காலை 10.30 மணிக்கு திருச்செங்கோடு அண்ணா சிலை அருகிலும், 12 மணிக்கு எலச்சிபாளையத்திலும், பகல் 1 மணிக்கு குருசாமிபாளையத்திலும்  மாலை 3.30 மணிக்கு ராசிபுரம் பஸ் நிலையம் அருகிலும் நடக்கும் கூட்டங்களிலும், மாலை 6 மணிக்கு நாமக்கல் பஸ் நிலையம் அருகில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் அவர் பேசுகிறார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com