சேலம், அக். 8: சேலம் மத்திய சிறையில் வெடிகுண்டு, போதைப்பொருள் நடமாட்டத்தைக் கண்டுபிடிப்பதற்காக, அக்னி என்ற லேப்ரடார் இன நாயும், ஜான்சி என்ற ஜெர்மன் ஷெப்பர்டு இன நாயும் வாங்கப்பட்டது.
3 மாத குட்டிகளாக இருந்த 2 நாய்களுக்கும் கோவை பயிற்சி மையத்தில் 6 மாத பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவடைந்ததால், அக்னி மோப்ப நாய் சேலம் மத்திய சிறைக்கு வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டது. மற்றொரு நாயான ஜான்சிக்கு, கல்லீரலில் கோளாறு இருப்பதால் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
சிறப்புப் பூஜை: சேலம் கொண்டு வரப்பட்ட அக்னிக்கு, சேலம் அஸ்தம்பட்டி சிறையில் உள்ள முனியப்பன் கோயிலில் சிறை கண்காணிப்பாளர் பரமேஸ்வரன் தலைமையில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
ரூ.2 லட்சத்தில் கட்டடம்: சேலம் சிறைக்குள் தங்க வைக்கப்படும் அக்னி, ஜான்சிக்காக ரூ.2 லட்சத்தில் புதிதாக தங்குமிடம் கட்டப்பட்டுள்ளது. கொசு கடிக்காமல் இருக்க கொசு வலை, தனித் தனியே கழிப்பிடம், குளியலறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை பராமரிக்க 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உணவு: 2 நாய்களுக்கும் உணவாக தினசரி தலா 350 கிராம் சோள மாவு உள்ளிட்ட தானியங்களால் தயாரிக்கப்பட்ட சத்துணவு, 2 முட்டைகள், மாமிசம் போன்றவை வழங்கப்படுகின்றன. இவற்றின் பராமரிப்புச் செலவுக்கு மாதம் ரூ.4,500 ஒதுக்கப்பட உள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









