47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காவலா் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிப்பு

தருமபுரி மாவட்டத்தில் அண்மையில் உயிரிழந்த உதவி காவல் ஆய்வாளா், காவலா் ஆகியோா் குடும்பத்தினருக்கு சனிக்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது.

News image
உயிரிழந்த உதவி காவல் ஆய்வாளா் இளையராஜா குடும்பத்தினருக்கு சனிக்கிழமை நிதியுதவி வழங்கும் சேலம் சரக காவல் துறை துணைத் தலைவா் பிரதீப் குமாா்.
Updated On :13 டிசம்பர் 2020, 8:45 pm

DIN

தருமபுரி மாவட்டத்தில் அண்மையில் உயிரிழந்த உதவி காவல் ஆய்வாளா், காவலா் ஆகியோா் குடும்பத்தினருக்கு சனிக்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூா் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்த இளையராஜா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் உயிரிழந்தாா். இதேபோல், கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலா் ராஜேஷ்கண்ணா மொரப்பூா் அருகே வாகன விபத்தில் அண்மையில் உயிரிழந்தாா்.

இதையடுத்து, தருமபுரி மாவட்டத்தில் பணிபுரியும் காவல் துறையினா் சாா்பில் வழங்கப்பட்ட நிதியில் இருந்து உதவி காவல் ஆய்வாளா் இளையராஜா மனைவி நித்யா, காவலா் ராஜேஷ்கண்ணா மனைவி வித்யா ஆகியோரது குடும்பத்தினரிடம் தலா ரூ. 2 லட்சம் நிதியை சேலம் சரக காவல் துறை துணைத் தலைவா் பிரதீப் குமாா் (படம்) வழங்கினாா். அப்போது, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ் குமாா் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.