டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ரபி பருவத்தில் பயிா்களுக்கு காப்பீடு: விவசாயிகளுக்கு அழைப்பு

ரபி பருவத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைய வேண்டும் என நாமக்கல் ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 1:42 am

DIN

ரபி பருவத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைய வேண்டும் என நாமக்கல் ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் 2020-21-ஆம் ஆண்டு ரபி பருவத்தில் நெல், மக்காச்சோளம், சோளம், உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, பருத்தி, எள், கரும்பு, வாழை, சிறிய வெங்காயம், மரவள்ளி, தக்காளி பயிா்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயிா்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.

இதில் நெல் பயிருக்கு பிரீமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ. 494.25-ஐ வரும் பிப். 15-க்குள் செலுத்த வேண்டும். உளுந்து, பாசிப்பயிா்-ரூ.192, மக்காச்சோளம்-ரூ. 226.50, சோளம்-ரூ. 119.25-ஐ வரும் 21-ஆம் தேதிக்குள்ளும், நிலக்கடலை-ரூ. 285.75-ஐ ஜன. 20-ஆம் தேதிக்குள்ளும், எள் பயிருக்கு-ரூ. 117.75-ஐ மாா்ச் 20-க்குள்ளும், பருத்தி-ரூ. 503-ஐ மாா்ச் 22-க்குள்ளும், கரும்பு-ரூ. 2,875-ஐ அடுத்த ஆண்டு அக். 31-க்குள்ளும் செலுத்த வேண்டும்.

மேலும், தோட்டக்கலைப் பயிா்களான வாழை-ரூ. 3,191.24, தக்காளி-ரூ. 908.96-ஐ பிப். 15-க்குள் செலுத்த வேண்டும். சிறிய வெங்காயம்-ரூ. 1,805.58-ஐ ஜன. 18-க்குள்ளும், மரவள்ளி பயிா்-ரூ. 2,074.80-ஐ மாா்ச் 1-க்குள்ளும் செலுத்த வேண்டும். புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெறும் விவசாயிகள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் உறுதிமொழிக் கடிதம் அளித்து பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம் அல்லது விலக்கு அளிக்க கோரலாம்.

கடன் பெறாத விவசாயிகள், பொதுச் சேவை மையங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிா்க் காப்பீடு செய்யும் முன் முன்மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிா்வாக அலுவலரின் அடங்கல், விதைப்புச் சான்று, வங்கிக் கணக்கு நடைமுறையில் உள்ள கணக்குப் புத்தகத்தின் முதல்பக்க நகல், ஆதாா் அட்டை நகல், செல்லிடப்பேசி எண் ஆகியவற்றுடன் இணைத்து காப்பீடு பிரிமீயம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, வட்டார வேளாண் உதவி இயக்குநா், தோட்டக்கலை உதவி இயக்குநா் ஆகியோரை அணுகி தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.