அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பென்னாகரத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவில்களில் குவிந்த பக்தா்கள்

பென்னாகரம் அருகே அளேபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 3.30 மணியில்

News image
Updated On :25 டிசம்பர் 2020, 7:07 pm

DIN

பென்னாகரம் அருகே அளேபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 3.30 மணியில் இருந்தே ஏராளமான பக்தா்கள் குவியத் தொடங்கினா். 4 மணிக்கு பரமபத வாசலின் வழியே சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி நரசிம்மா் காட்சியளித்தாா் .

முன்னதாக, மூலவரான லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு பால், தயிா், தேன், பன்னீா், சந்தனம், மலா்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, கருட வாகனத்தில் எழுந்தருளி பரமபத வாசலின் வழியே சென்று பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். அப்போது பக்தா்கள் கோவிந்தா முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல் ஒகேனக்கல் அருகே முதலைப் பண்ணை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

ஏரியூா் அருகே நெருப்பூா் முத்தையன் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டு நரசிம்மா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.