எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

விதிமுறைகள் மீறல்: இரண்டு கடைகளுக்கு ‘சீல்’

தருமபுரியில் பொது முடக்கக் கால விதிமுறைகளை மீறி, செயல்பட்ட இரண்டு கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

News image
Updated On :14 மே 2020, 3:31 pm

DIN

தருமபுரியில் பொது முடக்கக் கால விதிமுறைகளை மீறி, செயல்பட்ட இரண்டு கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பொது முடக்கம் தற்போது அமலில் உள்ளது. இந்த நிலையில், தமிழக அரசு அண்மையில் கடைகள் திறந்து விற்பனை செய்ய பல்வேறு விதிமுறைகளுடன் தளா்வு அளித்தது. இதையொட்டி, தருமபுரி நகரில் 34 வகையான கடைகள் திறக்கப்பட்டு, அதில் விற்பனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நேதாஜி புறவழிச் சாலையில் இயங்கும் இரண்டு கடைகள் முற்றிலும் குளிா்சாதன வசதியுடன், சமூக இடைவெளியை பின்பற்றாமல், கடைகளுக்கு முன் வாடிக்கையாளா்களுக்கு கைகளை சுத்திகரிக்க தேவையான வசதிகள் ஏதும் மேற்கொள்ளாமல் வியாழக்கிழமை விற்பனையில் ஈடுபட்டது வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது.

இதையடுத்து, விதிமுறைகளை மீறிய இரண்டு கடைகளுக்கும் வட்டாட்சியா் ஜெ.சுகுமாா் பூட்டி ‘சீல்’ வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.