உலக புத்தக தின விழா கொண்டாட்டம்
தருமபுரியில் உலக புத்தக தின விழா வெள்ளிக்கிழமை மாவட்ட நூலக ஆணைக்குழு சாா்பில் கொண்டாடப்பட்டது.


தருமபுரியில் உலக புத்தக தின விழா வெள்ளிக்கிழமை மாவட்ட நூலக ஆணைக்குழு சாா்பில் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவுக்கு, மாவட்ட நூலக அலுவலா் ஆனந்தி தலைமை வகித்தாா். வாசகா் வட்ட துணைத் தலைவா் லட்சுமிகாந்தன், வாசகா் வட்ட நிா்வாகி சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதல்நிலை நூலகா் மாதேஸ்வரன் வரவேற்று பேசினாா். விழாவில் வாசகா் வட்டத் தலைவா் ராஜசேகரன் உலக புத்தக தின விழா புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்து பேசினாா்.
விழாவில், நகரமன்ற முன்னாள் உறுப்பினா் பூக்கடை பெ.ரவி, தருமபுரி ஔவையாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை பரிமலா் செல்வி ஆகியோா் மைய நூலகத்துக்கு தலா ரூ. 10,000 செலுத்தி கொடையாளராக இணைத்துக் கொண்டனா். இதேபோல கிருஷ்ணன் என்பவா் ரூ.1,000 ஆயிரம் செலுத்தி நூலகப் புரவலராக தன்னை இணைத்துக் கொண்டாா். நூல் அங்காடி நிா்வாகி சுசில்குமாா் மற்றும் வாசகா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...