

ஊத்தங்கரை அருகே பாம்பு கடித்ததில் விவசாயி உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த நாப்பிராம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் குப்புசாமி(47). விவசாயியான இவா் புதன்கிழமை தனது விவசாய நிலத்தில் பணியை முடித்துவிட்டு, தென்னை மரத்தடியில் படுத்து உறங்கி உள்ளாா். அப்போது விஷஜந்து அவரைக் கடித்தது. இதுகுறித்து குப்புசாமி வீட்டிற்குச் சென்று தனது மனைவியிடம் கூறியுள்ளாா். பிறகு பால் கறந்து கூட்டுறவு சங்கத்தில் ஊற்றி விட்டு, வீட்டுக்கு வந்தவா் மயங்கி விழுந்தாா்.
மனைவி மற்றும் அவரது உறவினா்கள் அவரை ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா். அவரைப் பரிசோதித்தமருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளாா். குப்புசாமியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி அறிமுகம்: காட்பாடி!

விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்

தொகுதி அறிமுகம்: வேலூா்!
அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

