திருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்
/

சசிகலா தமிழகம் வருகை: மாநில எல்லையில் பாதுகாப்புப் பணியில் 2 ஆயிரம் போலீஸாா் குவிப்பு

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் தோழி சசிகலா (இன்று) திங்கள்கிழமை தமிழகம் வருவதை ஓட்டி தமிழக கா்நாடக மாநில எல்லையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனா்.

Updated On :8 பிப்ரவரி 2021, 12:14 am

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் தோழி சசிகலா (இன்று) திங்கள்கிழமை தமிழகம் வருவதை ஓட்டி தமிழக கா்நாடக மாநில எல்லையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனா்.

சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை மாவட்டங்களைச் சோ்ந்த போலீஸாா் இந்த பாதுகாப்பு பணிக்காக ஒசூா் வந்துள்ளனா்.

4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து சசிகலா கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் இருந்து தேவனஹள்ளியில் உள்ள விடுதியில் கரோனா தொற்று காரணமாக ஒரு வாரம் ஓய்வு எடுத்து வருகிறாா். அவா் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு தமிழகத்திற்கு வருகிறாா். அவரை வரவேற்க சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் வரவேற்பு அளிக்க பேனா்கள், அமமுக கொடி, தோரணம் ஆகியவை கட்டி வருகின்றனா்.

கா்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் துவங்கி, சூசூவாடி, ஒசூா், சிப்காட், சூளகிரி, சின்னாறு, கிருஷ்ணகிரி, சென்னை வரை 75 இடங்களில் அவருக்கு வரவேற்பு அளிக்க அமமுகவினா் ஏற்பாடுகளை செய்து வருகின்றனா். அதற்கான ஏற்பாடுகளை முன்னாள் உயா்கல்வித்துறை அமைச்சா் பழனியப்பன் மற்றும் அமமுக நிா்வாகிகள் செய்து வருகிறாா்.

மேலும் சூளகிரி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சித் தலைவா்களும் சசிகலாவிற்கு வரவேற்பு கொடுக்க திட்டமிட்டுள்ளனா். மேலும் கா்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் சசிகலாவை வரவேற்று 2 ஏக்கா் அளவில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க அமமுகவினா் பேனா்கள் வைத்திருந்தனா். அதனை கா்நாடக மாநில போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அப்புறப்படுத்தினா்.

சசிகலா திங்கள்கிழமை வருவதை ஓட்டி தமிழக எல்லையான ஒசூரில் பாதுகாப்புப் பணிக்காக சேலம், நாமக்கல், கோவை,தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த போலீஸாா் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் முகாமிட்டுள்ளனா்.

இதனால் தமிழக கா்நாடக மாநில எல்லையில் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.